சிவகங்கை மாவட்ட TCOA நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை காரைக்குடியில் மாவட்ட தலைவர் திரு சையது தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் திரு.வெள்ளைச்சாமி சங்கத்தில் உறுப்பினராக சேர்வதின் அவசியம் குறித்தும் வருங்கால கேபிள்டிவி தொழில்நுட்ப நுணுக்கமான குறித்தும் விளக்கமாக விவரித்தார். மாநில துணை தலைவர் திரு. தங்கையன் தொழிற்சங்க வரலாறு செய்திகளை TCOA சங்க நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பேசினார். மாநில துணை செயலாளர் திரு.விஷ்ணுவர்த்தன் இன்டர்நெட் தொழில் சவால்கள் சமாளிப்பது பற்றிய விளக்கங்களை கூறினார். மாவட்ட செயலாளர் கேசவன் நன்றி கூறினார்.