திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை திருத்தணியில் மாவட்ட தலைவர் திரு.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கையை துரிதமாக நடத்திட மாநில துணை தலைவர் திரு. தணிகைவேல் கேட்டுக் கொண்டார். பேக்கேஜ் பற்றிய விளக்கங்களை மாநில துணை செயலாளர் திரு. சேகர் விளக்கமாக எடுத்துரைத்தார்.திருத்தணி, திருவலங்காடு, RKபேட்டை, பள்ளிப்பட்டு தாலுக்கா நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது தாலுக்கா விவரங்களை எடுத்துரைத்தார்கள். மாவட்ட செயலாளர் திரு.சையதுபாஷா கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு கூடுதலாக உறுப்பினர் சேர்க்கை இருக்கும் என்று மாவட்டம் சார்பில் உறுதி அளித்துள்ளார்.
மாவட்ட பொருளாளர் திரு.வீரராகவன் நன்றி கூறினார்.