திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை திருநெல்வேலியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் திரு. வீரமுத்து அவர்கள் பேக்கேஜ் குறித்து ஆபரேட்டர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். மாநில பொதுச் செயலாளர் திரு.வெள்ளைச்சாமி உறுப்பினர் சேர்க்கை அவசியம் குறித்து விரிவுரை ஆற்றினார். மாநில துணை செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் வருங்கால இன்டர்நெட் சேவைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மாவட்ட தலைவர் திரு.அங்கப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திரு.சரவணன் வருங்கால கேபிள் டிவி நிலை குறித்து விளக்கங்கள் அளித்தார்.
மாவட்ட பொருளாளர் திரு.ஜின்னா நன்றியுரை கூறினார்.