இனிய மாலை நேரத்தில் சிவகங்கை சீமை இளையான்குடி நகரில் TCOA மாவட்ட மாநாடு கரகாட்டம்,ஒயிலாட்டம், கொட்டுமேளம் என உற்சாகமாக தொடங்கியது. கலைநிகழ்ச்சிகள், TIC FIBER விளக்கவுரை, மாநில நிர்வாகிகள் வாழ்த்துரை, நிறுவனத்தலைவரின் எழுச்சியுரை என மாநாடு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆபரேட்டர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். அனைவரும் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கி மாநாடு சிறப்புற நிறைவு பெற்றது.