TCOA காஞ்சிபுரம் மாவட்டம்..காஞ்சிபுரம் & பெரும்புதூர் தாலுக்கா மாநாடு இன்று காலை நடைபெற்றது. மாநாட்டில் மாநில பொருளாளர் திரு.கோவர்த்தனன், மாநில துணை தலைவர் திரு.அருணகிரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். TIC FIBER அறிமுகபடுத்தி உள்ள புதிய OTT திட்டங்களை பயன்படுத்தி ஆபரேட்டர்கள் தங்களது இணைப்புகளை அதிகரிப்பது குறித்தும், கட்டண சேனல்களின் வரைமுறையற்ற விலையேற்றத்தை எதிர்கொள்வது குறித்தும் திரு.கோவர்த்தனன் பேசினார். மாநில துணை தலைவர் திரு.அருணகிரி ஆபரேட்டர்களின் ஒற்றுமை அவசியம் குறித்து பேசினார். மாவட்ட செயலாளர் திரு.கர்ணன் மாவட்ட பொருளாளர் திரு.நேசக்குமார் வாழ்த்துரை வழங்கினார்கள் TCOA பப்ளிக் பவுண்டேஷன் செயல்பாடுகள் குறித்து அறக்கட்டளை செயலாளர் திரு.பிரபாகரன் பேசினார். காஞ்சிபுரம் தாலுக்கா காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மேற்கு என இரண்டு தாலுக்கா வாக பிரிக்கப்பட்டு புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.