தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA). கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் & மார்த்தாண்டம் தாலுக்கா மாநாடு இன்று மாலை குலசேகரத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திரு.ஜனல்குமார், திரு.வித்யாசாகர் தலைமை தாங்கினார். திரு.டைட்டஸ்ராஜன், திரு.சித்தார்த்தன், திரு.சாம்வில்பர்ட், திரு.ஜஸ்டின்ராஜ், திரு.சிவதாஸ், திரு.சாலெட்அகஸ்டின், திரு.பாபுமணிக்குமார், திரு.பெஞ்சமின், திரு.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திரு.ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் திரு.ரெஜிபால், மாவட்ட ஆலோசகர் திரு.உதயம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில பொதுச் செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் TIC INTERNET இணைப்புகளை அதிகரிப்பது குறித்தும் ஆபரேட்டர்கள் ஒற்றுமை அவசியம் குறித்தும் விளக்கவுரை ஆற்றினார். மாநில துணை தலைவர்கள் திரு.வீரமுத்து, திரு.தாமோதரன், திரு.பிரபு, கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் திரு.ராஜீ கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். திரு.ரவி நன்றியுரை கூறினார்.