TCOA கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை & குளச்சல் தாலுக்கா மாநாடு இன்று காலை நடைபெற்றது. மாநில துணை தலைவர்கள் திரு.வீரமுத்து, திரு.தாமோதரன், திரு.பிரபு, திரு.தமிழன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். தேனி மாவட்ட செயலாளர் திரு.ஆண்டவர், தேனி மாவட்ட பொருளாளர் திரு.செல்வம், மாவட்ட செயலாளர் திரு.ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் திரு.ரெஜிபால் மாவட்ட ஆலோசகர் திரு.உதயம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். கூட்டத்திற்க்கு திரு.சதீஷ் நன்றியுரை கூறினார். TIC Internet இணைப்புகளை அதிகரிப்பது குறித்தும் மாவட்ட மாநாட்டினை சிறப்பாக நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அனைவருக்கும் அறுசுவை மதிய உணவு பரிமாறப்பட்டது.